Tuesday 27 January 2015

குழல் ஓசை

காற்றில் மிதந்து கந்தம் வரும்,
கனவு வரும் காதல் கூட வரும் (என்று சொல்வார்).
வரும், வருவது தங்குமா?
வந்த வழியே விடைபெறக்கூடும்.

காந்தமாய் இழுக்கும் கண்ணன்
கானமாய்ப் பொழியும் அவன் குழல்,
எனையும் சற்றே  பற்றாதோ?
நினைவில் நின்றே ஆளாதோ?

உருகும் பக்தர் சங்கமே
குறுகும் வாழ்வில் வேண்டியது.
கிருஷ்ணர் கதை சொல்லும் அழகில்
உருவகித்து அமர்த்துவார், பாகவதாள் தானுமே!

கதையில் லயித்து கேட்போரும்
அதைச் சொல்லிதானும் மகிழ்வோரும்
உள்ளவரை, இப்பூவுலகில் பக்தி,
வெள்ளமாய்ப் பாய்ந்திடும், நம்புகிறேன்!

No comments:

Post a Comment