Tuesday 7 April 2015

ஆசையே பக்தியாய்!

சின்ன சின்ன ஆசை சுமந்து
சிட்டாய்ப் பறந்த காலம் வேறு
ஆசை சற்றே முதிர்வு பெற
ஆழ்ந்து சிந்தையில் பதிந்து விடும்

வாழ்க்கையின் நோக்கமாய் மாறி விடும்
வாழ்ந்து காட்ட வெறி பிறக்கும்.
சிறகடித்து பறந்து வரும் ஆசைகளை
விரட்டாமல் சற்றே, நோக்கினால் என்ன?

இறை அன்பு கூட, பக்தியாய்
உருமாறி வந்திட்ட விருப்பம் அன்றோ!
மெருகடைந்த ஆவலே, பற்றாய் மாறி
திருவடியே சரண் ஆக வாழ்விக்கும்.



No comments:

Post a Comment