எங்கே காணவில்லை
என் சின்னப் பிள்ளை,
மழை தூவும் மலர் போல
நகை தூவும் என் செல்வம்?
வளர்ந்த நீ என் முன்னே
வந்து நின்று பேசுகையில்
புதிய நபரைக் கண்டார் போல்
புரிந்து கொள்ள விழைகிறேன்.
தங்கம் உருமாறி வந்தாலும்
மங்காது ஒளி அன்றோ?
ஆங்காங்கே பல பெற்றோர்
இங்ஙனமே உணர்வாரோ?