Saturday 26 December 2015

தாயில் பலவகை! ஒரு தொடர்.

ஒரு தாய்க்கு தான் பெற்ற குழந்தைகள் தன் உறுப்புகளே போல. ஒன்றாய் இருந்தால் நலன்விரும்பும் அவள் எண்ணத்தில் முரண்பாடு வருவதில்லை. அதுவே, ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றவளுக்கு தெரியும் சமநிலை என்பது என்ன என்று, பாரபட்சம் என்பது என்னவென்று. இரு கை சேர்ந்தால் தான் ஓசை. இரு கால் ஒரு திசை நோக்கி சென்றாலே முன்னேற்றம். இரு கண்கள் இருவேறு காட்சி காண விழைவது ஒண்ணாத காரியம். இவற்றை ஒருங்கிணைக்க உடலோ மனமோ எந்த விசேஷ முயற்சியும் செய்வதில்லை. அதுவே இயல்பு. அப்படிதான் தாயும், தான் பெற்ற குழந்தைகள் கூட ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்று விழைகிறாள். அதில் இடர் ஏற்பட அவளால் பொறுக்க முடிவதில்லை. பொறுக்காமலும் அவள் என்ன செய்யப் போகிறாள். செய்வதறியாது வேதனையே அடைகிறாள்.


தன் குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் இணங்கி நட்போடும் அன்போடும் வாழும் போது தன்னைப்போல் பாக்யசாலி யாரும் இல்லை என்று உணர்கிறாள். தான் காத்து வந்த குஞ்சுகள், தனக்குப் பிறகும் ஒன்றோடொன்று துணையாகவும், உதவியாகவும், அணையாகவும் வாழும் என்ற எண்ணம் ஒரு பெரும் வலிமையை அவளுக்குத் தரும். அவர்கள் அருகருகே இருந்து போட்டி பொறமை வெறுப்பு என்று வாழ்ந்தால் அதைக் காண்பது போல் நரகம் இல்லை தாய்க்கு. இதை ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக, தன் குணம் புத்திக்குத் தகுந்தாற்போல் கையாள்கின்றனர்.


இதில் பல்வேறு விதமான தாய்மார்கள் ரகம் உண்டு...

அதனைப் பின்பு பார்ப்போம்

No comments:

Post a Comment