Sunday 29 November 2015

மொழி ஒரு கடல்

கடலைப்  போலே மொழியாம்
கடையக் கூடத் தேவையில்லை
தொட்ட தெல்லாம் சொல்லாம்
தொகுக்க நாமே தயாரா?

பொருள் கேட்டு நிற்காது
பொருள் பொதிந்து பொங்கிடும்
அள்ளும் ஆர்வம் நமக்கிருந்தால்
அளவின்றி உவந்து தரும்

ஒவ்வொரு துளியும் நம்முடன்
ஒளிந்து ஆடும் ஆட்டம்
பிடித்து நாமும் கையாள
பிடித்துப் போய்விடும் நமக்கது


No comments:

Post a Comment