தீபொறி பட்ட பஞ்சு மூட்டை
தீண்ட முடியாமலே போய்விடும்
கருகி உருமாறி போனதும்
திரும்பி வராது பஞ்சுத்திரி
அனலாய் வீசும் கோபமுமே
அழித்து விடும் அடுத்தவரை
தண்ணீர் கொட்டி நனைத்தாலும்
தொலைத்துவிடும் மென்மையை
அதிகம் எதுவும் இல்லாமல்
அளவாய் எல்லாம் காட்டியே
பஞ்சைப் போலே காக்கவேணும்
பந்தம் சொந்தம் அனைத்தையும்!
No comments:
Post a Comment