Friday 27 November 2015

அளவே அமிர்தம்

தீபொறி பட்ட பஞ்சு மூட்டை
தீண்ட முடியாமலே போய்விடும் 

கருகி உருமாறி போனதும் 
திரும்பி வராது பஞ்சுத்திரி 

அனலாய் வீசும் கோபமுமே 
அழித்து விடும் அடுத்தவரை 

தண்ணீர் கொட்டி நனைத்தாலும் 
தொலைத்துவிடும் மென்மையை 

அதிகம் எதுவும் இல்லாமல் 
அளவாய் எல்லாம் காட்டியே 

பஞ்சைப் போலே காக்கவேணும் 
பந்தம் சொந்தம் அனைத்தையும்!


No comments:

Post a Comment